Pages

Saturday, November 13, 2010

சிலருக்குத் தோல் எண்ணெய்ப் பசையாக இருக்கும். இதனால் ஆண் பெண் இருவருக்கும் முகத்தில் பரு தோன்றும். கூடுதலாக எண்ணெய்ச்சுரப்பி சுரப்பதனால், இந்த எண்ணெய்மயிர்க்கால் வழியாக வெளிவரும்போது தடைப்பட்டு முகப்பரு வடிவாக உருவெடுக்கும்.



முகத்திலுள்ள எண்ணெய்பசையை நீக்கும் வழிமுறைகள்

1 தேக்கரண்டி வெள்ளரிக்காய்ச் சாறு
½ தேக்கரண்டி தேசிப்புளி
3 துளிகள் Rose water
இவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் பரவிப் பூசி 15 நிமிடங்கள் விட்டுப் பின் நன்றாகக் கழுவுங்கள். பலன் கிடைக்கும். கவலைப்படத் தேவையில்லை.

முறை 2:

1 தேக்கரண்டி கடலைமா
2 தேக்கரண்டி வெள்ளரிச்சாறு


இவற்றை ஒன்றாகக் கலந்து கண், வாய் போன்ற பகுதிகளைத் தவிர்த்து முகத்தில் பரவப் பூசுங்கள். அதன் பின் 15 நிமிடங்கள் கழித்துச் சிறிளவு கைச்சூடான நீரால் கழுவுங்கள். எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும். 

பொதுவாகக் கவனிக்க வேண்டியது.

உடற்பயிற்சி உடலுக்கும் முகத்துக்கும் எப்போதும் சிறப்பத் தரும். வியர்வை மூலம் அழுக்குகள் வெளியேற்றப்படுகின்றது, மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது.


முகப்பவுடர், முகத்திற்குப் பூசுகின்ற கிரீம், பூச்சுக்கள், முகம் கழுவும் சவர்க்காரநீர், போன்றவற்றை அளவாகப் பயன்படுத்த வேண்டும். 


முகத்தை ஒவ்வொருநாளும் 3,4 முறைகள் கழுவ வேண்டும்.

No comments:

Post a Comment