Pages

Thursday, November 11, 2010

வல்லாரை

                                வல்லாரை


வல்லாரை கண்டீரோ. அதன் மகத்துவம் புரிந்தீரோ - மூளை
வல்லாரெல்லாம் சொல்லிச் சொல்லி உண்ணும்
வல்லமை யுணவு இவ்வால்லாரை தானன்றோ.


                            


இயற்கையே எமக்குத் தகுந்த உணவுகளையும் மருந்து வகைகளையும் இலவசமாகத் தந்திருக்கின்றது. அவற்றை நாம் தேடிப்பெற்று அநுபவிக்கத் தயங்கக் கூடாது. நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் முண்டரிகபரணி, சரஸ்வதி ஆகு, யோசனைவல்லி என்றேல்லாம் பெயர் பெறுகின்ற வல்லாரையை
France  நாட்டினர் சூப்புச் செய்வதற்குப் பயன்படுத்துகின்றார்கள்.






சிறப்பு:


நரம்புகளுக்கு வலிமை தருகிறது.
தோல்நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
குடல் புண்ணை ஆற்றுகின்றது.
நீர்க்கடுப்புக்கு மருந்தாக அமைகின்றது.
கண் எரிச்சலைக் குணமாக்குகின்றது.
குஸ்டரோகம் ஆரம்பத்தில் சாற்றைப் பூச வேண்டும். அதன் முடிச்சுகளை அகற்றக்கூடியது என Dr.Hunter  கூறியிருக்கின்றார்.

 நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கின்றது. 
 இரத்தசுத்தி செய்யும் தன்மையுள்ளது.
 பல்லிலேயுள்ள மஞ்சள் நிறம் மறைய 30, 40 நாள்கள் பச்சையாக எடுத்துத் தேய்த்தல் வேண்டும்.
 மனநோய்களுக்கு மருந்தாகவும் காணப்படும். 


அதிகமாக் சாப்பிட்டால்:

தலைச்சுற்று ஏற்படும்
மயக்கம் ஏற்படும்
உடம்பெல்லாம் வலியாக இருக்கும்.

இவ்வல்லாரையை வாரத்திற்கு இரண்டு முறை பாவித்தால் போதுமானது.


வல்லாரை இலை 150 கிராம் வசம்பு 15 கிராம் எடுத்து இவற்றைப் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும். மந்தபுத்தி நீங்கும்.


உண்ணும் முறை:


1. வல்லாரை, வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ, உப்பு, தேசிப்புளி இவற்றை ஒன்றாக எடுத்து பச்சடி போல் அரைத்துச் சாப்பிடலாம்.
2. வல்லாரையை சிறிதுசிறிதாக அரிந்து அத்துடன் தக்காளிப் பழத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சிறிதுசிறிது துண்டுகளாக நறுக்கி அத்துடன் சேர்த்து உப்பு, தேசிப்புளி கலந்து உண்ணலாம்.
3. உறைப்பை விரும்பாதவர்கள் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவையில்லை.

No comments:

Post a Comment