Pages

Sunday, February 10, 2013

வீட்டு வைத்தியம்



1. வீட்டில் இருமல், தடிமல்  தொல்லைகளுக்கான கைவைத்தியம்

அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரித்து அதன்மேல் இந்த நசித்த சூடான உருளைக்கிழங்கை நன்நாகப் பரப்பி அதன்மேல் ஒரு துணியைப் போட்டுவிடவும். பின் ஒரு துணியால் மார்புப் பகுதியைச் சுற்றிக்கட்டவும். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் விடவும்.

2. தடிமல்:

ஒரு லீட்டர் கொதித்த நீரை  ஒரு பாத்திரத்தில் விட்டு 9 கிராம் உப்பை அதனுள் போட்டு அந்த நீராவியின் மேல் முகத்தைப் பிடிக்கவேண்டும். அப்போது அந்நீராவி வெளியே போய்விடாமல் ஒரு துணியால் மூடவேண்டும். (ஆவி பிடித்தல்
போல்)

3. காதுவலி:

வெங்காயத்தை வெட்டி ஒரு தாய்ச்சியில் சூடாக்கவேண்டும். பின் ஒரு துப்பரவான துணியில் இச்சூடாக்கிய வெங்காயத்தைக் கட்டி வலியுள்ள காதின்மேல் மேல் வைக்கவும். ஒரு மணித்தியாலங்கள் அளவில் அப்படியே இருக்க விடவும்.

4. தொண்டைநோ:

ஒரு துணியில் தயிரை நன்றாகப்பிரட்டவும். இல்லையென்றால் ஒரு துணியை தயிரில் அழிழ்த்திப் பிழிந்து எடுக்கவும். கழுத்தைச் சுற்றி இத்துணியைப் போடவும். பின் வேறு ஒரு துணியை அதன் மேல் சுற்றி நீண்டநேரம் விடவும்.

5. காய்ச்சல்:

இரண்டு துணிகைளை சாதாரண தண்ணீரில் துவைத்து எடுக்கவும். அந்நீரைப் பிழிந்து எடுத்த துணியை முழங்காலின் கீழ்ப்பகுதி பாதம் இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில்  இரண்டு கால்களிலும் சுற்றிவிடவும். 10, 15 நிமிடங்கள் குளிரவிடவும். பலதடவைகள் இதைத் திரும்பத் திரும்பச் செய்யலாம்.

Thanks to Vigo magazin