Pages

Monday, February 6, 2012


                                        வனப்பின் மகிழ்ச்சியும் விருதும் 
                 
         





Friends18.com Orkut Scraps


                                             விளையாட்டாகவோ வினையமாகவோ நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களுக்கும் அதற்குரிய பலாபலன் கிடைத்தேயாகும். நான் அறிந்த தெரிந்த அலசிய பல விடயங்களை எனது வனப்பு வலைப்பூவில் பரப்பி விடுவேன். அதற்குக் கிடைக்கும் அங்கீகாரம் எவ்வளவு என்பதை எனக்குக் கிடைக்கின்ற பின்னூட்டங்களின் மூலம் அறிந்து கொள்ளுகின்றேன். செய்த வினைக்குக் கிடைத்த பரிசாக ஏற்று மகிழ்கின்றேன்.
                                                     இந்தவகையிலே எனது அன்புக்குரிய நண்பி ஸ்ரவாணி தனது மனதுக்குப் பிடித்த பிளாக்குகளில் ஒன்றாக என்னுடைய இந்த வனப்பு என்னும் வலைப்பூவையும் தெரிந்தெடுத்து டுநைடிளவந டீடழப என்னும் Germany விருதினை வழங்கிக் கௌரவித்து இருக்கின்றார். அவருக்கு என்னுடைய நன்றியையையும் மனமகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 
                   இப்பொறுப்பை நான் எடுத்தவுடன் முதிலில் எனக்கு மனதில் தோன்றியவர் ரமணி சார் தான். ஆனால், மகேந்திரன் முந்திவிட்டார். ரமணி சாருடைய சிந்தனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பிளாக்கிற்கு அவர் வைத்திருக்கும் பெயரும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் வாசகமும் எனக்குப் பிடிக்கும். அத்துடன் பின்னூட்டங்களை ஓடிவந்து தருகின்ற பண்பும் எனக்குப் பிடிக்கும். பறவாயில்லை. நான் கொடுத்தால் என்ன நண்பன் கொடுத்தால் சேர வேண்டியவை என்ன சேர வேண்டியவர்களைத் தான் போய்ச் சேரும். 
 என்னும் பிளாக் 
  
கண்கவர் படங்களுடன் மனதுக்குகந்த ஆன்மீக கதைகளையும் ஆலயங்களையும் எமக்கு அடையாளங்காட்டி தன் சிறந்த படைப்புக்களின் மூலம் பலரைக் கவர்ந்திழுக்கும் இராஐராஐஸ்வரி அவர்களுடைய http://jaghamani.blogspot.com/ என்னும் வலைப்பூ
  
                                      குழந்தைகள் உலகம் மகத்தானது. அதில் நம்பமுடியாத திறமைகளும் துடிப்புகளும் நகைச்சுவைகளும் நிறைந்திருக்கும். அத்தனையையும் தெரிந்தெடுத்து அவற்றை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டி எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் என்னும் திடகாத்திரமான நம்பிக்கையை விதைக்கின்ற குழந்தைகள் வழங்கிய அறிவுத் துளிகளை அற்புதமாகப் பட்டியலிட்டுக் காட்டுவது மட்டுமன்றி திருக்குறளுக்கு பஞ்சமே இல்லாது பல கட்டுரைகளை தந்துதவுகின்ற திண்டுக்கல்தனபாலன் அவர்களுடைய http://dindiguldhanabalan.blogspot.com/

        
                        தான் பெற்ற அநுபவத்தையும் கண்ட காட்சிகளையும் எடுத்துக்காட்டுவதுடன் அறியப்படாத பல தகவல்களைத் தந்து தன் பயண சுவாரஷ்யங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்ற ராம்வி நடத்துகின்ற http://maduragavi.blogspot.com/


அற்புதமான கட்டுரைகள். மனித மனங்களின் அலைபாயும் எண்ணங்கள் அவற்றிற்கான காரணங்கள்,  அறிவுரைகள் இப்படிப் பலவகையான சுவாரஸ்யமான தகவல்களைக் காவி வருகின்ற Dr.P.Kandaswamy    அவர்களுடைய  http://swamysmusings.blogspot.com/
     
இவ்விருது பெற்ற அனைவரும் இவ்வலை உலகில் மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று வேண்டிய படி என்னுடைய அன்பு மலர்களை இம்மலர் கொத்துடன் தந்து மகிழ்கின்றேன். 

                                               

Friends18.com Orkut Scraps
விருது பெற்றவர்கள் இப்படத்தை உங்கள் பிளாக்கில் இணைத்துக் கொள்ளுங்கள்