வனப்பின் மகிழ்ச்சியும் விருதும்
நான் முதலில் சிறுகதையின் கோ. சிந்திக்கச் செய்யும் முடிவுரை தருவதில் சிற்பி. தற்போது ஆன்மீக ஸ்லோகங்கள் மூலம் பலரும் பயன் பெறட்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் பிளாக் பணி தொடரும் வை கோபாலக்கிருஸ்ணன்அவர்களுடைய http://gopu1949.blogspot.com
என்னும் பிளாக்
கண்கவர் படங்களுடன் மனதுக்குகந்த ஆன்மீக கதைகளையும் ஆலயங்களையும் எமக்கு அடையாளங்காட்டி தன் சிறந்த படைப்புக்களின் மூலம் பலரைக் கவர்ந்திழுக்கும் இராஐராஐஸ்வரி அவர்களுடைய http://jaghamani.blogspot.com/ என்னும் வலைப்பூ
குழந்தைகள் உலகம் மகத்தானது. அதில் நம்பமுடியாத திறமைகளும் துடிப்புகளும் நகைச்சுவைகளும் நிறைந்திருக்கும். அத்தனையையும் தெரிந்தெடுத்து அவற்றை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டி எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் என்னும் திடகாத்திரமான நம்பிக்கையை விதைக்கின்ற குழந்தைகள் வழங்கிய அறிவுத் துளிகளை அற்புதமாகப் பட்டியலிட்டுக் காட்டுவது மட்டுமன்றி திருக்குறளுக்கு பஞ்சமே இல்லாது பல கட்டுரைகளை தந்துதவுகின்ற திண்டுக்கல்தனபாலன் அவர்களுடைய http://dindiguldhanabalan.blogspot.com/
தான் பெற்ற அநுபவத்தையும் கண்ட காட்சிகளையும் எடுத்துக்காட்டுவதுடன் அறியப்படாத பல தகவல்களைத் தந்து தன் பயண சுவாரஷ்யங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்ற ராம்வி நடத்துகின்ற http://maduragavi.blogspot.com/
அற்புதமான கட்டுரைகள். மனித மனங்களின் அலைபாயும் எண்ணங்கள் அவற்றிற்கான காரணங்கள், அறிவுரைகள் இப்படிப் பலவகையான சுவாரஸ்யமான தகவல்களைக் காவி வருகின்ற Dr.P.Kandaswamy அவர்களுடைய http://swamysmusings.blogspot.com/
இவ்விருது பெற்ற அனைவரும் இவ்வலை உலகில் மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று வேண்டிய படி என்னுடைய அன்பு மலர்களை இம்மலர் கொத்துடன் தந்து மகிழ்கின்றேன்.
விருது பெற்றவர்கள் இப்படத்தை உங்கள் பிளாக்கில் இணைத்துக் கொள்ளுங்கள்