வனப்பு
அழகான ஆரோக்கியமான வாழ்வுக்கு சில வழிமுறைகள்
Saturday, July 19, 2014
Sunday, March 2, 2014
தடிமல் இருமல்
வீட்டினுள்ளும் குளிர் வெளியிலும் குளிர். தாங்குமா
உடல். இச்சு இச்சு என்று தும்மல். லொக்கு லொக்கு என்று இருமல். உலகத்தை சளித்து
என்னவாவது. வாழவேண்டுமே. வழியா இல்லை. இயற்கையே எமக்கு மருந்து தந்திருக்கிறதே. வேண்டாத
இரசாயனங்கள் எதற்கு? இதற்கு முன் ஒருமுறையும் இவ்வாறான ஒரு பதிவு
தந்திருக்கின்றேன். இது சற்று விரிவானது
மாரி காலத்தில் எங்களுடைய மென்மையா உடல் சவ்வுகள் வலுக் குறைந்து
காணப்படும். நோய் எதிர்ப்பு செல்கள் குறைவான போக்குவரத்தை மேற்கொள்ளும். குளிர்
நேரத்திலே பஸ், கோப்பி கடை போன்ற இடங்களில் பலர் கூடி இருப்பதனால் சுத்தமில்லாத காற்று
காணப்படும். இவ்வாறான இடங்களில் சில வைரஸ்கள் இலகுவாக வாழுகின்ற தன்மையைப்
பெற்றிருக்கும். அத்துடன் இலகுவாக பலவீனமான எங்கள் உடலிலே பற்றிக்கொள்ளும். ஆரம்பத்தில்
தொண்டை கடிக்கும் பின் மூக்குத் துவாரத்தினூடாக நீர் வடியும்
இவ்வாறன காலங்களில் sauna இக்கு
போகக்கூடாது. ஏனென்றால் நோய் உள்ள இந்த நேரத்தில் எங்கள் உடல் அமைதியாக இருக்க
வேண்டியது அவசியம். விட்டமின் c தடிமலுக்கு சிறந்தது. யார் போதுமான அளவிற்கு
விட்டமின்கள் உள்ள உணவுகள் பழங்கள் மரக்கறிகள் போதுமான அளவு உண்ணுகின்ற கத்தைக்
கொண்டிருக்கின்றார்களோ பழக்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் தடிமலுக்குப் பயப்படத்
தேவை இல்லை.
தடிமல் இருமலுக்ககுரிய வீட்டு வைத்தியம்
உடல் களைப்பில்லாது நன்றாக மூடிக்கட்டிக்
கொண்டு நோய் உள்ள காலங்களில் படுத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது..
ஒவ்வொரு நாளும் 2 தொடக்கம் 3 லீட்டர் நீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் சளி
இலகுவாக்கப்பட்டு இறுக்கத் தன்மை குறைந்து வெளியேறிவிடும்
கழுத்து நோவை salbei டீ சுகமாக்கும். கழுத்து
நோவிற்கு கட்டித்தயிரை விரல்களால் எடுத்து கழுத்தில் பூசி ஒரு துணியால் அரை மணி
நேரம் அதை மூடிக் கட்டி விடவும். பின் துடைத்து எடுத்து விடலாம் அல்லது கழுவவும்
அறையை ஈரத்தன்மையாக வைத்திருக்க வேண்டும்.
வெப்பமூடியில் ஈரத் துணியைப் போட்டு வைக்கலாம் அல்லது ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்து வெப்பமூட்டியின் மேல் வைக்க வேண்டும்,
துத்தநாகமும் விட்டமின் c யும் சேர்ந்த
பவுடர் கரைத்துக் குடிக்கலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4409VHctV9rPfN_dPx8RYPc53XzqGsawQp7yo3x44Pr16k1aElCUTAKLYdVSTtsX0A9K_EoIJXrEZYdCLJd2pzzVyOWdVk7RGdwDTVybho-Lr5dhUYhoEdF-BsZM2mB88fYLzUAQGq0kK/s1600/images.jpg)
தடிமலினால் வரும் கழுத்திலுள்ள காயங்களை அல்லது
வீக்கத்தை நீக்கும். அத்துடன் சளியை இளகச் செய்யும்.
கோழி மரக்கறிகள் சேர்த்த சூப்பை வீட்டில்
செய்து குடிக்கலாம்.
kamille என்று சொல்லப்படும் தேயிலை ஆவி
பிடிக்கவும். மூக்கினால் மூச்சை உள்
இழுத்து வாயினால் மூச்சை வெளியிடவும். 1௦ நிமிடங்கள்
ஆவி பிடிக்கவும்.
நெஞ்சில் சளி பிடித்திருந்தால் schmalz என்று சொல்லப்படுகின்ற பன்றி அல்லது வாத்துக்கொழுப்பு அல்லது பட்டர் கொழுப்பு அதாவது நெய்
என்றும் சொல்லலாம் அதனை நெஞ்சுப்பகுதியில் பூசி அதன் மேல் eukalyptus என்று சொல்லப்படுகின்ற எண்ணையை தடவ
வேண்டும் .இது சுவாசத்தை இலகுவாக்கும். eukalyptus ஐ vicks இலை என்று எம்மவர் அழைப்பார்கள்.
Hotwatter Bottle ( Warmflasche)
காது குத்துக்கு Hotwater bottle வைக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை
சிறிதாக வெட்டி ஒரு துணியில் கட்டி காதின் மேல் பிடித்துக் கொண்டு இருக்கவும்.
பெப்பெர்மினஸ் எண்ணையை நெற்றியின் இறுதிப்பகுதியில் பூசினால் தலையிடி
குறைவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இது கண்களில் படாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
37 தொடக்கம் 4௦ சூட்டில் நீருள்ள பாத்திரத்தினுள் கால்களை அழுத்தி வைக்கவும் இது
தலையிடியைக் குறைக்கும்
உடல் சூடு அதிகரித்து இருந்தால் முழங்காலின் கீழ்ப்பகுதியில் ஈரத் துவாயை
எடுத்து சுற்றிக்கட்டவும். அதற்க்கு மேல் உலர்ந்த ஒரு துவாயைக் கட்டவும். இந்த
ஈரத் துவாயை ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
இந்த வீட்டு வைத்தியங்கள் எதுவும் குணமடையச் செய்யவில்லை என்றால்
அருகிலுள்ள மருந்துக்கடையில் நோயை சொல்லி மருந்தை வாங்கலாம். இல்லை என்றால்
வைத்தியரிடம் நாடலாம். முதலில் கை வைத்தியம் முடியவில்லை என்றால் மாத்திரம்
மருத்துவர் வைத்தியம்.
நன்றி எனது அனுபவமும் vigo பத்திரிகையும்
Sunday, January 19, 2014
வீட்டு வைத்தியம்
1. வீட்டில் இருமல்இ தடிமல் தொல்லைகளுக்கான கைவைத்தியம்
அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவூம். நெஞ்சின்மேல் ஒரு துணியை விhpத்து அதன்மேல் இந்த நசித்த சூடான உருளைக்கிழங்கை நன்நாகப் பரப்பி அதன்மேல் ஒரு துணியைப் போட்டுவிடவூம். பின் ஒரு துணியால் மாHபுப் பகுதியைச் சுற்றிக்கட்டவூம். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் விடவூம்.
2. தடிமல்:
ஒரு லீட்டர் கொதித்த நீரை ஒரு பாத்திரத்தில் விட்டு 9 கிராம் உப்பை அதனுள் போட்டு அந்த நீராவியின் மேல் முகத்தைப் பிடிக்கவேண்டும். அப்போது அந்நீராவி வெளியே போய்விடாமல் ஒரு துணியால் மூடவேண்டும். (ஆவி பிடித்தல்போல்)
Monday, September 2, 2013
சோறு ஆரோக்கியமான உணவு.
ஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உணவுல்லாத ஒரு உணர்வு ஆசியநாட்டவர்களிடையே இருக்கின்றது. அவர்கள் அத்தியாவசியமான முதல் உணவு அரிசிச்சோறாகும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மொறக்கோ, துருக்கி, ஆபிரிக்கா, போலந்து, இவ்வாறு பலதரப்பட்ட நாட்டுமக்களுடன் ஒன்றாக வாழ்ந்து அவர்களுடன் பழகும்போது அவர்களுடைய தேசியஉணவுகளையும் சுவை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அவ்வாறு சுவை பார்க்கின்ற வேளையிலும் தமது தேசியஉணவை அவர்கள் மறப்பதில்லை.
அதுபோல் இங்கு வளருகின்ற இளந்தலைமுறையினர் எவ்வாறான உணவுகளை விரும்பினாலும், எமது தேசியஉணவை கூடுதலாக விரும்புகின்றனர். ஒவ்வொருநாளும் விரும்பி உண்ணவில்லையானாலும், எமது உணவில் பிடிப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால், தற்போது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலேயே சோறை வெறுத்து பிட்ஷா, ஹம்பேகர் போன்ற உணவுகளுக்கு இளந்தலைமுறை அடிபணிந்து வாழ்வது அறியக்கூடியதாக இருக்கின்றது. போசாக்கின்றி உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற இவ்வுணவுகளை உண்பதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை இவர்கள் நினைத்துப் பார்பதில்லை. இவ்வுணவுவகைகள் Fastfood என்ற பெயரில் Fast ஆக எமது உடலைப் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
அளவுக்கதிகமாக சோற்றை உண்பதுடன் சாப்பிட்டவுடன் ஒரே இடத்தில் அசையாது இருந்து தொலைக்காட்சிகளைப் பார்ப்பது, உண்டவுடன் நீண்ட நேரம் நித்திரை செய்வது போன்ற காரணங்களாலேயே இதிலுள்ள மாப்பொருள் உடற்பருமனை ஏற்படுத்துகின்றது
அரிசிச்சோறு ஒரு மாப்பொருள் உணவு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வரிசிச்சோறானது சுகாதார மேம்பாட்டுப் பண்புகளைக் கொண்டது. இதில் ஆரோக்கிமற்ற கொழுப்பு காணப்படாது. இதில் புரதம், விற்றமின், கனிப்பொருள்கள் காணப்படுகின்றன. இதில் விற்றமின்கள் B1.B6 போன்றவை இருக்கின்றன. பி1 நரம்புகளுக்கும், வளர் தசை மாற்றத்திற்கு பி6 தோலுக்கும், இரத்தம் உடலில் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது.
பியோட்டின் பொட்டாசியம், துத்தநாகம் போன்றவையும் இதில் காணப்படுக்கின்றன. பியோட்டின் தலைமயிருக்கும் நகத்திற்கும், பொட்டாசியம் இரத்தஅழுத்தத்தை சீராக்குவதற்கும், துத்தநாகம் குளிரான சமயத்தில் உடல் வெப்பநிலையைப் பாதுகாப்பதற்கும், நோய்எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றது. இதில் காபோவைதரேற்று அதிகம் உண்டு. அதிகநேரம் பசியைத் தாக்குப்பிடிக்கும் சக்தி சோற்றுக்கு உண்டு. இது இலகுவில் சமிபாடடையும் தன்மையுள்ளதால் வயிறு குடல் சம்பந்தமான நோயுள்ளவர்களுக்கும் சோறு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது. அரிசிச் சோறு தேவையில்லாத உடலுக்குள் இருக்கும் நீரை வெளியகற்றும் சக்தி கொண்டது. அதனால், உடலினுள் உள்ள நஞ்சுப் பொருள்கள் சிறுநீராக சிறுநீர்ப்பை ஊடாக வெளியகற்றும்.
இவ்வாறான சிறப்புகள் கொண்ட எமது தேசிய உணவை அளவோடு உண்டு நலமாக வாழ்வோம்.
Saturday, August 31, 2013
நீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்
வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு
பேரிகொண்டு நீர்திரண்டு பெய்ய வேண்டும் - அதுபோல்
நீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்
நீரழிவு நின்னுடலில் நேரவேண்டும்.
நீர்நிலைகள், வெள்ளம், கடல், போன்றவற்றிலிருந்து நீரை மொண்டு மேகமானது இருண்டு மழையைப் பொழிய வேண்டும். அதுபோல் நீரை அருந்தி தாகம் நீங்கி நீங்கள் உயிரோடு வாழவேண்டுமென்றால், உங்கள் உடலிலே இருந்து நீர் சரியான முறையில் சிறுநீராகவோ வியர்வையாகவோ வெளியகற்றப்படவேண்டும். இல்லையெனில் உடலெங்கும் நீர் விஷமாக்கப்பட்டு உங்கள் உயிர் உலகத்தைவிட்டு நீங்கிவிடும்.
நீரழிவு நோய் ஏற்படவேண்டும். என்று தப்புக் கணக்குப் போட்டுவிடவேண்டாம்.
Subscribe to:
Posts (Atom)