Pages

Thursday, December 23, 2010

கீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்



முருங்கைக்கீரை:

சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும்.
பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்.

முளைக்கீரை:

இது வயிற்றுப்புண், நரம்புத்தளர்ச்சி, மாலைக்கண்நோய், நீரடைப்பு, மூக்கு, தொண்டை, பல் சம்பந்தமான நோய்களுக்குப் பலன் தரும் கீரையாக இருக்கின்றது.

பொன்னாங்கண்ணிக்கீரை:

கண் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. சூடான உடல் உள்ளவர்களுக்கு குளிர்மையைக் கொடுக்கும். தோல் சுரக்கத்தை நீக்கும்.

வெந்தயக் கீரை: 

அறிவுக்குத் தெளிவ தரும் கீரை. உடல் சுறுசுறுப்பைக் கொடுக்கும். பலம்தரும். சமீபாட்டுக் கோளாறுகளை நீக்கும்.

அகத்திக் கீரை:

மலச்சிக்கலை நீக்கி சமிபாட்டுத் தொல்லைகளை நீக்கும். மூளைக்கோளாறுகள் நீங்கும். இதில் சுண்ணாம்புச்சத்துக்கள் நிறைய இருக்கின்றது.

கொத்தமல்லிக்கீரை:

மூளை, மூக்கு, சிறுநீரகம் சம்பந்தமான சகல வியாதிகளையும் நீக்குகின்றது. எலும்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றது.

 நன்றி சித்தமருத்துவக்குறிப்புக்கள்