Pages

Monday, December 26, 2011

ஆடைகளில் படிந்திருக்கும் கறைகளை நீக்க எளிய வழிமுறைகள்


     
           
எமது அழகான விருப்பமான ஆடைகளில் எம்மை அறியாமலே கறை படிந்துவிட்டால் களங்கிப் போகின்றோம். அதற்கு எதிரான நடவடிக்ககைள எடுக்க முடியாமல் அவ் ஆடையை அணிய முடியாமல் போய்விட்டதே எனக் கவலைப்படுகின்றோம். இதற்காக எக்கவலையும் கொள்ளத் தேவையில்லை. நான் தருகின்ற இக்குறிப்புக்களைக் கவனியுங்கள். அதன்படி முயற்சி செய்யுங்கள். அநுபவியுங்கள். 
      
             முதலில் கறை படிந்துள்ள ஆடை எவ்விதமான நூலில் தயாரிக்கப்பட்டுள்ளது, என்ன விதமான கறை ஆடையில் படிந்திருக்கின்றது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதுபற்றிய விளக்கம் உங்களிடம் இல்லையென்றால் மட்டுமே கறை அகற்றும் நிபுணர்களை நாட வேண்டும். இலகுவான வழிமுறைகள் எம்மிடம் இருக்கும் போது நாம் எதற்காக நிபுணர்களைத் தேடி அலைய வேண்டும். 

பொதுக்குறிப்புக்கள்:


                             

கறைநீக்கும் கலவையை வீட்டில் தயாரிக்கும் முறை:

15 கிராம் கறியுப்பை அரை லீற்றர் தூய்மையான Wine spirit (Weingeist) உடன் கரைக்கவும். இந்தக் கலவை அநேகமான கறைகளை நீக்கப் பயன்படுகின்றது.         


இதைவிட எச்சிலைக் கைகளில் எடுத்து கறை படிந்த இடத்தில் தேய்த்து அதன் பின் அவ்விடத்தைக் கழுவலாம். இதுவும் ஒருவகை உடனடி கறை அகற்றும் முறையாகப்படுகின்றது. 



          பால் கோப்பி, பால் தேநீர் கறை அகற்றும் வழிமுறைகள்,


           

          முதலில் குளிர் நீரினால் அவ்விடத்தைக் கழுவ வேண்டும். பின் சூடான கிளிசரீனை அதன்மேல் தேய்க்க வேண்டும். முடிவில் அக்கிளிசரீனை நீரினால் கழுவ வேண்டும். இப்போது பாருங்கள். பால்கோப்பிக் கறையோ பால்தேநீர் கறையோ உங்கள் கண்ணில் தென்படுகின்றதா? ......

                பால் கலக்காத கோப்பி, தேநீர் கறையை அகற்ற

கழுவக்கூடிய ஆடை:

              ஒரு பாத்திரத்தின் மேற்பகுதியில் கறை படிந்துள்ள பகுதியை இழுத்துப்பிடியுங்கள். அதன் மேல் கொதிக்க வைத்த நீரை ஊற்றுங்கள். அதன் பின் கிளிசரீனை அக்கறையின் மேல் நன்றாகத் தேய்த்துப்பூசுங்கள். பின் நீரினால் அப்பகுதியைக் கழுவுங்கள். 

கழுவிப் பாவிக்க முடியாத ஆடையும் கம்பளி ஆடையும்:

               முதலில் கிளிசரினை கறைபடிந்துள்ள பகுதியின்மேல் தேய்க்க வேண்டும். 1 அல்லது 2 மணித்தியாலங்கள் அப்படி ஊறவிடுங்கள். பின் சூடான தண்ணீரால் துடைத்து எடுங்கள். பின் மேலும் கீழுமாக இரண்டு துணிகளை வைத்து இடையிலே இக்கறை படிந்த துணியை வைத்து அழுத்தியினால் ( Iron) அழுத்திக் காயவையுங்கள். இப்போது பாருங்கள்......


பட்டு ஆடை:

                சூடான சவர்க்கார நீரினால் தேய்த்துக் கழுவி அகற்றலாம்.


          ஆடையில் ஒட்டியுள்ள Chewing gum           
             அகல்வதற்கான வழிமுறைகள் 

     

எவ்வித நூலினால் நெய்யப்பட்ட ஆடையாக இருந்தாலும் இவ்வழி முறையைக் கையாளலாம். முதலில் ஆடையை ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டு குளிர்சாதனப்பெட்டி Freezer இனுள் வைத்துவிடுங்கள். இந்த Chewing gum இறுக்கமாக வந்ததன்பின் Chewing gum  ஐச் சுரண்டி எடுங்கள். அதன் பின் இறுதியில் (Weingeist) Wine Spirit  பயன்படுத்தி தேய்த்தபின் சாதாரணமாக கறை அகன்றுவிடும். 



 பெரிய கம்பளம் அல்லது பெரிய ஆடைகளாக இருந்தால் Chewing gum மேல் ஐஸ்கட்டியை வைத்து இறுகிய பின் சுரண்டி எடுக்கலாம். 

                     பசையை நீக்குவதற்கு

பசையைக் காயவிட்டு சுரண்டி எடுக்கலாம். பின் (Wein Spirit) Wine spirit அல்லது Spirit இனால் துடைத்துவிடலாம். 


                  Jam  (Marmelade) கறைகள் 

கழுவக்கூடிய துணி, கழுவமுடியாத துணி, கம்பளித்துணி:

சூடான கொதிக்க வைத்த நீரினால் கழுவவேண்டும். பின் அவ்விடத்தை நன்றாகத் தேய்த்தபின் (Weingeist) Wine Spirit இனால் துடைக்கலாம். 

கம்பளி ஆடை:


ஒரு பாத்திரத்தின் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்நீர் ஆவியின் மேல் கறைபடிந்த பகுதியைப் பிடித்தல் வேண்டும். பின் சாதாரணமாகக் கழுவும்போது அக்கறை அகன்றுவிடும்.


                                               இரும்புக்கறை


ஒரு இரவு முழுவதும் மோரினுள் இரும்புக் கறை படிந்த பகுதியை அமிழ்த்தி வைக்க வேண்டும். அடுத்தநாள் வெளியே எடுத்து நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். 

கம்பளி:


மருந்துக் கடைகளில் விற்கும் சவர்க்கார ஸ்பிரிற் இனால் கழுவிய பின் சாதாரண ஸ்பிரிற் விட்டுக் கழுவ வேண்டும். 

பட்டு ஆடை:

பட்டு ஆடையில் பிடிக்கும் இரும்புக்கறை நீங்கமாட்டாது.




மேலும் பலவகைக் கறைகளை அகற்றுகின்ற வழிமுறைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்